விக்கிரம சிங்கையாரியன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விக்கிரம சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் நான்காவது அரசனான இவன் கி.பி 1292 ஆம் ஆண்டிலிருந்து 1302 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான்.

விரைவான உண்மைகள் விக்கிரம சிங்கையாரியன் Vickrama Cinkaiariyan, ஆட்சி ...

இவன் காலம் உள்நாட்டுக் குழப்பங்கள் மிகுந்த காலமாக இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த புத்த சமயத்தவரான சிங்களவருக்கும், இந்துத் தமிழருக்கும் கலகம் மூண்டது. இரண்டு தமிழர் சிங்களவரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிங்களவர் தலைவனுக்கும் வேறு 17 பேருக்கும் விக்கிரம சிங்கையாரியன் மரண தண்டனை விதித்ததாகவும் மேலும் பலரைச் சிறையில் அடைத்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை மூலம் அறியக் கிடைக்கின்றது. இதனால் பெருமளவு சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கினர். எனினும் விக்கிரம சிங்கையாரியன் இறக்கும் வரை அவனுக்குச் சிங்களவர்களால் தொல்லைகள் இருந்தே வந்தன.

விக்கிரம சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகன், வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாண அரசனாக முடி சூட்டிக் கொண்டான்.

Remove ads

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads