விஜயா வங்கி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஜயா வங்கி (Vijaya Bank) இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் நடுத்தர அளவு இந்தியப் பொதுத்துறை வங்கியாகும். இவ்வங்கி, இந்திய அரசால் தேசியமயமாக்கம் செய்யப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும்.

Remove ads
வரலாறு
விஜயா வங்கி, 'ஸ்ரீ அட்டாவர் பாலகிருஷ்ண செட்டி என்பவரால் 1931 அக்டோபர் 23 அன்று மங்களூர் பன்ட்ஸ் ஹாஸ்டல் என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது.[1] விஜயதசமி நாளில் தொடங்கப்பட்டதால் இது விஜயா வங்கி என அழைக்கப்பட்டது.[2] கர்நாடகாவின் தக்சின கன்னடா மாவட்ட விவசாயிகளிடம் வங்கியை பயன்படுத்துதல், சிக்கனம் மற்றும் தொழில் தொடங்கும் பழக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்திற்காகவே இவ்வங்கி தொடங்கப்பட்டது. 1958 ஆம் ஆண்டில் இவ்வங்கி அட்டவணை படுத்தப்பட்ட வங்கியாக மாறியது. 1963 - 68 காலகட்டத்தில் இவ்வங்கியானது 9 சிறிய வங்கிகளை தன்னுடன் இணைத்ததன் மூலமாக படிப்படியாக, இந்தியா முழுவதும் செயல்படும் வங்கியாக வளர்ந்தது. 1980 ஏப்ரல் 15 அன்று, இந்திய அரசால் இவ்வங்கி தேசியமயமாக்கம் செய்யப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads