வெண்கூதாளம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெண்கூதாளம் பூ நீர்க்கரையில் பூக்கும். அதனைக் கொடியோடு பறித்து ஆண்கள் தம் கால்களில் கழல் போல அணிந்துகொள்வர். மகளிர் கூந்தலில் சூடிக்கொள்வர்.

சங்ககாலச் செய்திகள்
  • நீரோட்டக் கரைகளில் வளரும் இந்தப் பூவைப் பறித்து ஆடவர் கால்களில் வீரக்கழல் போல அணிந்துகொள்வர். [1]
  • வெண்கூதாளம் பூ தாழை மரத்தடியில் பூக்கும். காவிரிப்பூம்பட்டினத்தில் பரதவர் சுறா மீனின் கொம்பை நட்டு விழாக் கொண்டாடியபோது அவர்களது மகளிர் தாழைமரத்து அடியில் மலர்ந்திருந்த வெண்கூதாளப் பூவைப் பறித்துத் தலையில் அணிந்திருந்தனர்.[2]
  • குன்றுதோறாடும் முருகனைத் தம் சிறுகுடியில் தொண்டகப்பறை முழக்கத்துடன் குரவைக்கூத்து ஆடி வழிபட்ட குன்றக் குறவர் கூட்டத்தில் வேலன் குளவிப் பூவும், வெண்கூதாளப் பூவும் சேர்த்துத் தொடுத்த மாலையை மார்பில் அணிந்திருந்தான். [3]
  • வெண்கூதாளம் பூ ஆற்றங்கரை மரத்தில் குருகு அமர்ந்திருப்பது போல மலர்ந்திருக்கும். [4]
  • வையை ஆறு சுமந்துவந்த மலர்களில் ஒன்று. [5]
Remove ads

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads