வெளிமுத்தி பழம்பதிநாதசுவாமி கோயில்
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெளிமுத்தி பழம்பதிநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், வெளிமுத்தி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
Remove ads
வரலாறு
பாண்டிய மன்னனால் பிரதிஷ்டை செய்யபட்ட இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கற்றளியாக கட்டப்பட்டது.[2]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் பழம்பதிநாதர், பெரியநாயகி சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
பூசைகள்
இக்கோயிலில் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads