வேளிர் (தமிழகம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேளிர் (Velir) என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள் ஆவர். வேளிர் குடிமக்களின் அரசன் வேள். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல் சேர்ந்துவந்தாதால் அவனை வள்ளல் எனக் கொள்ளல் வேண்டும். இதன் பொருள் 'உதவி' என்பதாகும்.[1] எனவே, இவர்களை கொடையாளிகள் என்று சொல்லலாம். சங்ககாலத்தில் வேளிர்கள், மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில வேந்தர்கள் இவர்களின் உதவியை நாடியிருக்கிறார்கள்.
சங்காலத்து வேளிர்கள் 20 பேர் இதுவரை அறியப்பட்டுள்ளனர்.[2] அவர்களை மூவேந்தர் நாட்டைக் கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,
Remove ads
- ஆய் ஆண்டிரன்
- பொதியிற் செல்வன் திதியன்
- பாரி வேள்
- இருங்கோவேள்
- நெடுவேளாவி
- வேளாவிக் கோமான் பதுமன்
- வையாவிக் கோப்பெரும் பேகன்
- நன்னன் வேண்மான்
- வெளியன் வேண்மான் ஆய் எயினன்
- வெளிமான்
- எருமையூரன்
- முத்தூறு என்னும் ஊரில் தொன்முது வேளிர் வாழ்ந்துவந்தனர். இந்த ஊர் மக்களுக்கு நெல் ஒரு குப்பையாம். இதனைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தனதாக்கிக்கொண்டானாம்.[3][4]
- வீரை முன்றுறை என்னும் ஊரில் வாழ்ந்த மக்களுக்கு உப்புதான் குப்பையாம். 'அடுபோர் வேளிர்' இங்கு வாழ்ந்துவந்தனர்.[5]
- குன்றூர் என்னும் ஊரில் 'தொன்றுமுதிர் வேளிர்' வாழ்ந்தனர். அவர்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினர்.[6]
- குன்றூரின் கிழக்குப்பக்கம் கடல் இருந்தது. அந்த ஊரில் தொன்றுமுதிர் வேளிர் வாழ்ந்தனர். [7]
Remove ads
வேளிர் போர்கள்
- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவன் இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் போரிட்டான்.[8]
- பல்யானைச் செல்கெழு குட்டுவனின் செல்வாக்கைக் கண்டு முரசு முழங்கும் வேந்தரும், வேளிரும் கடலிலும், காட்டிலும் அரண் அமைத்துக்கொண்டு நடுங்கினார்களாம்.[9]
- வேந்தரும், வேளிரும் ஒன்றாகக் கூடிப் பேசிக்கொண்டு மோகூர் என்னுமிடத்தில் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனைத் தாக்கினர். அவர்கள் நிலைகலங்கி அதிரும்படி செங்குட்டுவன் தாக்கி வென்றான்.[10]
- வேந்தரும், வேளிரும் பிறரும் பெருஞ்சேரல் இரும்பொறையை வழிமொழிந்து நடந்துகொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் ஆலையில் கரும்பு போல அவர்களை நசுக்கிவிடுவானாம்.[11]
- இளஞ்சேரல் இரும்பொறை வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்றம் எய்தி அரசோச்சினானாம்.[12]
- திதியன் என்னும் அரசன் தன் நாளவையில் இருந்தபோது வேளிரொடு போரிடுவதற்காகத் தன் வாளை உருவினானாம். அவனது வாளுக்கு இரை கிடைக்கவில்லையாம். அதனால் அந்த வேலில் கறை படியவில்லையாம்.[13]
Remove ads
இதனையும் பார்க்க
ஒப்புநோக்குக
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads