அமிதவ நந்தி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

அமிதவ நந்தி (Amitava Nandy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1943 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 14 ஆவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். மேற்கு வங்காளத்தின் டம் டம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேற்கு வங்காள மாநிலத்தின் அரசியலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சிய பிரிவு உறுப்பினராகச் செயல்பட்டார். தனது பதவிக் காலத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.

விரைவான உண்மைகள் அமிதவ நந்திAmitava Nandy, நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) ...

அமிதவ நந்தி ஒவ்வோர் ஆண்டும் அமர் எகுசே பிப்ரவரி' (அழியாத பிப்ரவரி 21) நினைவாக முன்முயற்சிகளை எடுத்தார். அரசியல் சதியின் விளைவாக ஒரு காலத்தில் பிரிக்கப்பட்ட இரண்டு 'வங்காளங்களுக்கு' இடையே கலாச்சார ஒற்றுமையை மேம்படுத்த முயற்சித்தார். 2014 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று அமிதவ நந்தி புற்றுநோயால் இறந்தார்.[1]

அமிதவ நந்தியின் மனைவி இல நந்தி பிதான்நகர் நகராட்சியின் முன்னாள் நகர்மன்ற குழு உறுப்பினராக இருந்தார்.

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads