அம்பத்தூர் ஐயப்பன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்பத்தூர் ஐயப்பன் கோயில் என்றும் அம்பத்தூர் சபரிமலை என்றும் அழைக்கப்படும் கோயிலானது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அம்பத்தூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஓர் ஐயப்பன் கோயில் ஆகும்.[1][2]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 35.45 மீ. உயரத்தில், (13.138366°N 80.178691°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அம்பத்தூரின் சூரப்பட்டு (சண்முகபுரம்) பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
தத்துவங்கள்
நாம் இறைநிலையை அடைய நம் வாழ்வில் உணரவேண்டிய யோகநிலைகளைக் குறிக்கும் வகையில், ஐயப்பன் கோயில்களில் 18 படிக்கட்டுகள் கொண்ட அமைப்பின் மூலம் நமக்கு உணர்த்தப்படும் தத்துவங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- பிறப்பு நிலையற்றது;
- சாங்கிய யோகம்;
- கர்ம யோகம்;
- ஞான யோகம்;
- சன்னியாசி யோகம்;
- தியான யோகம்;
- ஞான விஞ்ஞான யோகம்;
- அட்சர பிரம்ம யோகம்;
- இராஜவித்யா இராஜகுஹ்ய யோகம்;
- விபூதி யோகம்;
- விஸ்வரூப தரிசன யோகம்;
- பக்தி யோகம்;
- சேஷத்ர விபாக யோகம்;
- குணத்ரய விபாக யோகம்;
- புருஷோத்தம யோகம்;
- தைஐவாசுரஸம்பத் விபாக யோகம்;
- ச்ராத்தாதரய விபாக யோகம்;
- மோட்ச சன்னியாச யோகம்.[3]
அவ்வாறே, இக்கோயிலிலும் 18 படிக்கட்டுகள் கொண்ட அமைப்பு ஏற்படுத்தி, அம்பத்தூர் சபரிமலை என்று அழைக்கின்றனர்.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads