அல்லாவுதீன் கட்டடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அல்லாவுத்தீன் கட்டடம் (Allahuddins Building) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகரமான ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று கட்டடமாகும். இக்கட்டடம் பேகம்பேட்டைப் பகுதியில் அமைந்துள்ளது.
அல்லாவுதீன் கட்டடம் குலாம் அல்லாவுதீனின் குடும்பத்திற்கு சொந்தமானதாகும். அல்லாவுதீன் மற்றும் பிள்ளைகள் வீடு நிசாமின் ஆதிக்கத்தின் வணிக உலகில் மிக முக்கியமான வீடுகளில் ஒன்றாகும். கட்டடத்தின் திட்டம் 1933 ஆம் ஆண்டில் தொடங்கி 1934 ஆம் ஆண்டில் மிர் ஒசுமான் அலி கானின் ஆட்சியின் போது முடிக்கப்பட்டது.[1] கட்டடத்தில் வண்ணமயமான கண்ணாடி முகப்பில் சிக்கலான உலோக சட்டகங்கள் மற்றும் கம்பிகள் மற்றும் வெளிப்புறமாக அலங்கரிக்கப்பட்ட படிக்கட்டுகள் ஆகியவை உள்ளன. இது மாநில அரசின் ஐதராபாத்து நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் தரம்-1 பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அமைப்பு. ஐதராபாத்து பெருநகர கட்டுமானம் தொடர்பான பணிகளின் ஒரு பகுதியாக கட்டடத்தின் முன்புறத்தில் உள்ள சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.[2] [3] [4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads