ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (Andhra Pradesh Tourism Development Corporation) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு மாநில அரசு நிறுவனம் ஆகும்.

Remove ads
நிறுவன சேவைகள்
ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பாரம்பரியம், இயற்கை, சாகசம், சுகாதாரம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வளமான வரலாற்று மற்றும் இயற்கை பின்னணியைக் குறிக்கும் சுற்றுலாத் தொகுப்புகளைப் பயனாளர்களுக்கு வழங்குகிறது.[1] இந்த சுற்றுலா திட்டம் ஆந்திரப் பிரதேசத்தின் 8 மையங்களை உள்ளடக்கியது. திருப்பதி, ஹார்ஸ்லி மலைகள், அரக்கு பள்ளத்தாக்கு, விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீசைலம் போன்ற முக்கியமான சுற்றுலாத் தலங்களில் இத்துறையின் சார்பில் ஓய்வு விடுதிகள் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. 63 மேம்படுத்தப்பட்ட பேருந்துகளும், 29 வால்வோ பேருந்துகள், 8 குளிரூட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட பேருந்துகள், 4 பகுதி தூங்கும் வசதியுடைய பேருந்துகள், 11 சிற்றுந்து, 1 கவர்ச்சிகரமான பழமையான வாகனங்கள், 10 குவாலிஸ் என பலதரப்பட்ட வாகனங்கள் சுற்றுலாவிற்காக இத்துறையினால் பயன்படுத்தப்படுகின்றன.

இக்கழகம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பொழுது போக்குச் சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது.[2] பல சாத்தியமான சுற்றுலா வளர்ச்சியினை அடையாளம் கண்டுள்ளது.[3] 2006 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மக்களின் சுற்றுலாத் தேவையினைப் பூர்த்தி செய்யச் சேவை மையம் ஒன்றைத் திறந்துள்ளது.[4]
Remove ads
இலக்கு ஆந்திரப் பிரதேசம்
இந்திய மாநிலங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் ஆந்திரா 3வது இடத்தில் உள்ளது. 2013ஆம் ஆண்டில், 152.1 மில்லியன் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆந்திரப் பிரதேசத்திற்கு வருகை தந்தனர். இது மொத்த உள்நாட்டுச் சுற்றுலா சந்தையில் 13.3% ஆகும். மாநிலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், கடற்கரைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் பழமையான வனப் பகுதிகள் உள்ளன. சில குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து புதிய சுற்றுலா உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் 100% சொகுசு வரி விலக்கு அதிகாரிகளால் வழங்கப்படுகிறது.[5]
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
