இரா. குமரவேலன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரா. குமரவேலன் (பிறப்பு: அக்டோபர் 19 1938) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் பிறந்த இவர் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்மொழி அறிவு பெற்றவர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எழுதிய நூல்கள்
பூங்குன்றன் கவிதைகள், தமிழ் நாடக ஆய்வு, கவிதை நாடகம் - ஒரு கண்ணோட்டம், பொன்னி, தமிழ் நாடக வளர்ச்சி, விடுதலை இயக்கமும் திராவிட இயக்கமும், மணலும் நுரையும் (கலீல் கிப்ரான் - தமிழாக்கம்) என பல நூல்களை எழுதியுள்ளார்.
பெற்ற விருதுகள்
கலைமாமணி விருது, நாடகச் செம்மல் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவர் எழுதிய “திருக்குறள் - வ. உ. சிதம்பரனார் உரை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
நாட்டுடமையாக்கம்
2024 நவம்பரில் இவரது படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடமை ஆக்கியது. இவரது மரபுரிமையாளர்களுக்கு பரிவுத் தொகையாக ரூ 10 இலட்சம் வழங்கியது.[1][2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads