காத்தவராயன் கதைப்பாடல் (நூல்)

From Wikipedia, the free encyclopedia

காத்தவராயன் கதைப்பாடல் (நூல்)
Remove ads

காத்தவராயன் கதைப்பாடல் நா. வானமாமலை அவர்களால் தொகுத்து, ஆய்வு செய்து எழுதப்பெற்ற நூலாகும். [1] இந்த நூலில் வானமாமலை தன்னுடைய ஆய்வு குறித்த கட்டுரையையும், கதைப்பாடலையும் தொகுத்துள்ளார். [1]

விரைவான உண்மைகள் நூலாசிரியர், நாடு ...

நாட்டார் வழக்காற்றியல் குறித்து கதைப்பாடல்களில் அதிகம் பேசப்படுகின்றன. வண்ணார்கள் பற்றிய குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளதாகவும், அவை முக்கியமான வரலாற்று ஆவணமென்றும் தி இந்து தமிழ் நாளிதழில் பார்க்கத் தகாதவர்களாக்கப்பட்ட மனிதர்கள் என்ற கட்டுரையில் வெ. சந்திரமோகன் கூறுகிறார். [2]

இந்நூலை மதுரைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் காத்தவராயன் என்பவரின் வரலாற்றை பதிவு செய்யும் நாட்டார் கதைப்பாடல் இடம்பெற்றுள்ளது.

Remove ads

உள்ளடக்கங்கள்

  • காத்தவராயன் கதைப்பாடல்
  • நன்றியுரை
  • கதைப்பாடல்
  • குறிப்புகள்

காத்தவராயன் கதைப்பாடல் - இப்பகுதியில் காத்தவராயன் கதைப்பாடல் குறித்து தன்னுடைய ஆய்வினையும், கருத்தையும் வெளிப்படுத்துகிறார்.

நன்றியுரை - மதுரைத் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தல்.

கதைப்பாடல் - கதைபாடலின் தொகுப்பு

குறிப்புகள்- கதைபாடலின் சொற்கள் சிலவற்றுக்கான பொருள், பிற பாடலுடன் ஒப்புமை, விளக்கம் ஆகியவை நிறைந்தது.



ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads