கார்வி குசராத்து பவன்
தில்லியில் உள்ள குசராத் அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமாகும். From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்வி குசராத்து பவன் (Garvi Gujarat Bhavan) என்பது இந்தியாவின் தலைநகரமான தில்லியில் உள்ள குசராத் அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமாகும். புது தில்லி அக்பர் சாலையில் 7,066 சதுர மீட்டர் நிலப்பரப்பில் இது கட்டப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள பசுமை கட்டடம் சான்றிதழ் பெற்ற முதல் மாநில விருந்தினர் இல்லமாகவும் இது உள்ளது.[1]
Remove ads
கட்டடம்.
தவுல்பூர் மற்றும் ஆக்ரா கற்களைப் பயன்படுத்தி கார்வி குசராத்து பவன் கட்டப்பட்டுள்ளது.[2] இந்த புதிய கட்டிடம் 7,066 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது மேலும் இந்த வளாகத்தின் மொத்த செலவு ரூ 131 கோடியாகும். [3] குசராத்து பவனில் சுமார் 78 வெவ்வேறு கருப்பொருள்களுடன் விருந்தினர் அறைகள் உள்ளன. அவை ஏழு மாடிகளில் விநியோகிக்கப்படுகின்றன, இதில் 2 குடியரசுத்தலைவர் அறைகள், 17 முக்கிய விருந்தினர்கள் அறைகள் மற்றும் 59 விருந்தினர் அறைகள் உள்ளன.[4]
இந்த புதிய கார்வி குசராத்து பவனில் பின்வரும் வசதிகள் உள்ளன.[5][6]
- 19 அடுக்கு அறைகள்
- 59 அறைகள்
- உணவகம்
- பொது உணவு விடுதி
- வணிக மையம்
- நினைவு பரிசு கடை
- பல்நோக்கு மண்டபம்
- மாநாட்டு அறை
- நான்கு ஓய்வறைகள்
- உடற்பயிற்சிக் கூடம்
- யோகா மையம்
- மாடி தோட்டம்
- நூலகம்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads