காளப்பட்டி மாரியம்மன் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காளப்பட்டி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் மாரியம்மன் சன்னதியும், தான்தோன்றியம்மன், மாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் திருக்கல்யாண திருவிழா நடைபெறும்.இந்த மாரியம்மன் கோவிலானது இக்கிராமத்தை சுற்றிய 12 ஊர் பொதுமக்களுக்கு உட்பட்ட காவல் தெய்வமாக வணங்கப்படுகின்றது. புரட்டாசி மாதம் 15 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.சாந்த சொரூபிணியானவளின் அதிகபட்ச நேர்த்திக்கடன் அடி அளந்து கும்பிடுதல் ஆகும்.திருவிழாவிற்கு அடுத்த நாள் பார்வேட்டை எனப்படும் அம்மனின் திருவீதி உலா வானவேடிக்கைகளுடன் நடைபெறும்.
காட்சியகம்
- கோபுரம்
- தூண்களில் உள்ள சிற்பங்கள்
- தூண்களில் உள்ள சிற்பங்கள்
- தூண்களில் உள்ள சிற்பங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads