ச. கு. கார்வேந்தன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ச. கு. கார்வேந்தன் (S.K. Kharventhan, பிறப்பு: 10 மே 1948) இந்திய அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் வழக்கறிஞர் ஆவார். 1996 முதல் 1998 வரை தமிழ் மாநில காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (பதினோராவது மக்களவை), 2004 முதல் 2009 வரை இந்தியத் தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (பதினான்காவது மக்களவை) இருந்தார்.[1] 14 ஆவது மக்களவையில் விவாதங்களில் சிறப்பாகப் பங்கேற்ற மூவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[2]
Remove ads
வகித்த பதவிகள்
- தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராக ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார்.
- அனைத்து இந்திய பார் கவுன்சில் தலைவராக இருந்தார்.
- இந்திய சட்டக் கல்வி மேம்பாட்டுக்கு தேசிய விருது பெற்றார்.
- வழக்கறிஞர் தொழிலில் வாணாள் சாதனை விருது பெற்றார்.
நூலாசிரியராக
சமூக நீதி என்ற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலை தாராபுரம் எஸ் கே கே அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads