சிந்து ராஜசேகரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிந்து ராஜசேகரன், இந்தியாவின் தமிழகத்தைச் சார்ந்த எழுத்தாளரும் திரைப்பட தயாரிப்பாளருமாவார். அவரது முதல் ஆங்கில புதினமான பலவண்ணக்காட்சிகளின் பிரதிபலிப்பு(Kaleidoscopic reflections) என்ற புத்தகம் 2011ம் ஆண்டில் கிராஸ் வேர்ட் புத்தக விருதுக்காக பட்டியலிடப்பட்ட சிறப்பைக்கொண்டது,[1] அவரது கட்டுரைகள், கவிதைகள் மற்றும் புனைகதைகள் பல்வேறு சர்வதேச வெளியீட்டாளர்களால் தொகுப்புககளாக வெளிவந்துள்ளது. இவர், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கேம்பர் சினிமா என்ற சுயாதீன திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை, ரீவத்சன் நடதூர், சுஷாந்த் தேசாய் மற்றும் சரண்யன் நடதூர் ஆகிய இளம் தொழில்முனைவோரோடு இணைந்து நிறுவியுள்ளார், இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை மற்றும் காலங்களை அடிப்படையாகக் கொண்டு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்தோ-பிரித்தானிய திரைப்படமான ராமானுஜன் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவரது இரண்டாவது புத்தகம் அதனால் நானகவே இருக்கட்டும் (So I Let It Be) என்ற சிறுகதைகளின் தொகுப்பாகும்; இது 2019 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[2]
Remove ads
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
இலக்கியப் படைப்புகள்
திரைப்பட படைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads