சுவாமி நிரஞ்சனானந்தர்

From Wikipedia, the free encyclopedia

சுவாமி நிரஞ்சனானந்தர்
Remove ads

சுவாமி நிரஞ்சனானந்தர் ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் நித்திய நிரஞ்சன் கோஷ். இவரது தந்தை பெயர் அம்பிகாசரண் கோஷ். 1882 ஆம் ஆண்டு ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். தம்மை அடிக்கடி வந்து பார்க்கச் சொன்ன ராமகிருஷ்ண பரமஹம்சர், இவரிடம் "மனதைப் பேய்களைப் பற்றி சிந்திக்கப் பழக்கினால் நாளடைவில் நீயும் பேயாவாய், கடவுளைச் சிந்திக்க ஆரம்பித்தால் வாழ்வில் ஆனந்தம் நிறையும்" என்று அறிவுறுத்தினார். தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம் குருவிற்கு சேவைசெய்ய 1885 ஆம் ஆண்டு நிரஞ்சன் வீட்டை விட்டு வெளியேறினார். நிரஞ்சனை தமது அந்தரங்கச் சீடர்களில் ஒருவராகவும் ஈசுவர கோடிகளில் ஒருவராகவும் ராமகிருஷ்ண பரமஹம்சர் குறிப்பிட்டுள்ளார்..[1]

விரைவான உண்மைகள் சுவாமி நிரஞ்சனானந்தர், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads