ஞாயிறு புஷ்பரதேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புஷ்பரதேசுவரர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஞாயிறு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 61 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புஷ்பரதேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13.2613°N 80.2145°E ஆகும்.
புஷ்பரதேசுவரர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[1] சூரிய புஷ்கரணி மற்றும் சிம்ம தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன.[2] கண்கள் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் இங்குள்ள புஷ்கரணிகளிலுள்ள நீர் நம் உடலில் படுவதினால் குணமடைகின்றன என்ற நம்பிக்கை இங்கு நிலவுகிறது.[3] சூரியன் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.[4] சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் தொன்மையான கோயிலாகும் இது.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads