திணை மயக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அகத்திணைப் பாடல்களில் திணை என்பது வாழ்க்கையின் உரிப்பொருளைக் கொண்டு தீர்மானிக்கப்படும்.

இந்த உரிப்பொருள் மயங்குவது இல்லை. [1] முதற்பொருள் நிலம், பொழுது என இருவகைப்படும். இவற்றில் நிலம் மயங்காது. [2] ஏனையவை மயங்கும்.

ஒரு நிலத்துக்கு உரிய பூ வேறு நிலத்தில் பூக்க வாய்ப்பு உண்டு. நெய்தல் பூ மருத நிலத்தில் பூக்கும். ஒரு நிலத்துக்கு உரிய பறவை வேறு நிலந்நிலும் பறக்கும். இப்படி வரும்போது அந்தப் பூவையும், புள்ளையும் அந்தந்த நிலத்தோடு சாரத்திப் பொருள் உணர்ந்துகொள்ளவேண்டும். காலமும் அப்படித்தான். குறிஞ்சி நிலத்துக்கு உரிய யாமம் என்னும் சிறுபொழுதும், கூதிர் என்னும் குளிர்காலமும் பிற நிலங்களிலும் வருமல்லவா? [3] இப்படி வருவதுதான் திணை மயக்கம்.

Remove ads

நம்பியகப்பொருள் விளக்கம்

ஐந்திணைக்கு உரிய எல்லாப் பொருளும் திணைமயக்கமாக வரும் என நாற்கவிராச நம்பி குறிப்பிடுகிறார். [4] இதற்கு எழுதப்பட்ட உரை எந்தப் பொருள் எந்தத் திணையில் மயங்கி வந்துள்ளது என்பதை விளக்கிப், பல மேற்கோள் பாடல்களைத் தந்துள்ளது.

மயங்கி வந்த பாடல்கள்

  • நெய்தல் நிலத்தில் முல்லைக்கு உரிய மாலைப் பொழுது [5]
  • பாலைத்திணைப் பாட்டில் மருதத் திணைக்கு உரிய ஊடல் என்னும் உரிப்பொருள். [6]
  • பாலைத்திணைப் பாட்டில் இரங்கல் என்னும் நெய்தல் உரிப்பொருள். [7]
  • முல்லைத்திணைப் பாட்டில் மருதத் திணைக்கு உரிய ஊடல் உரிப்பொருள். [8]
  • முல்லைத்திணைப் பாட்டில் நெய்தல் திணைக்கு உரிய இரங்கல் உரிப்பொருள். [9]

மேலும் சிலவற்றைச் சிற்றட்டகம் மூலத்தில் காணலாம்.

Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads