தியு 142 வானூர்தி அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

தியு 142 வானூர்தி அருங்காட்சியகம்map
Remove ads

17.718002°N 83.329812°E / 17.718002; 83.329812

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

தியு 142 வானூர்தி அருங்காட்சியகம் (TU 142 Aircraft Museum) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட தூவுபோல்வ் தியு-142 வானூர்தி ஆகும். விசாகப்பட்டிணம் நகரச் சுற்றுலா மேம்பாட்டின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. இது திசம்பர் 2017-இல் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது.[1]

Remove ads

சேவை

தியு 142 வானூர்தி இந்தியக் கடற்படையில் 29 ஆண்டுகள் சேவையாற்றி உள்ளது. இந்த வானுர்தி 29 மார்ச் 2017 அன்று அரக்கோணத்தில் உள்ள ஐ. என். எஸ். ராஜாளியில் படைப்பிரிவிலிருந்து ஓய்வுபெறும் போது 30,000 மணி நேரம் விபத்தில்லாமல் சேவையாற்றியது குறிப்பிடத்தக்கது.[2]

வானூர்தி அருங்காட்சியகம்

இந்த விமானத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாக்க ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்தது. திட்ட வளர்ச்சிக்கான செலவு சுமார் ₹14 கோடி செலவிட்டது. இதற்கு ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நிதியளித்தது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads