திருவேகம்பத்தூர் ஏகாம்பரநாதசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருவேகம்பத்தூர் ஏகாம்பரநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருவேகம்பத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[2]

விரைவான உண்மைகள் அருள்மிகு ஏகாம்பரநாதசுவாமி கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் ஏகாம்பரநாத சுவாமி, சினேகவள்ளி அம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகன், லெட்சுமி, சரஸ்வதி, சந்திரன், சண்டீகேஸ்வரர், துர்க்கை, நவகிரகங்கள், அருள்மிகுபைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads