தீன் மூர்த்தி பவன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தீன் மூர்த்தி பவன் (Teen Murti Bhavan - Teen Murti House), இந்தியாவின் முதல் பிரதம அமைச்சரான ஜவகர்லால் நேருவின் தங்குமிடமாகும். ஜவகர்லால் நேரு பிரதமராக 27 மே 1964-இல் இறக்கும் வரை, 16 ஆண்டுகள் தீன் மூர்த்தி பவனில் தங்கி பிரதமர் கடமைகளை ஆற்றினார்.
Remove ads
வரலாறு
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1930-இல் பிரித்தானிய இந்தியாவின் தலைமைப்படைத்தலைவர் தங்குவதற்காக 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் இக்கட்டிடம் புது தில்லியின் கன்னாட்டு பிளேசு பகுதியில் கட்டப்பட்டது.[1]
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இக்கட்டிடம் ஜவகர்லால் நேருவின் தங்குமிடமாக விளங்கியது. 1964-இல் நேருவின் மறைவிற்குப்ப் பின், இக்கட்டிடம் நேரு அருங்காட்சியகம், கோளரங்கம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

