தூய சவேரியார் பொறியியல் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தூய சவேரியார் பொறியியல் கல்லூரி (St. Xavier's College of Engineering) இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் தன்னாட்சி பொறியியல் கல்வி நிறுவனமாகும். இக்கல்லூரி குழித்துறை உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கு சொந்தமானது. கோட்டாரின் உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தால் 1998- ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு மறைமாவட்ட அமைப்பினால் நிர்வகிக்கப்படுகிறது. அருட்சகோதரி எம். மரியா வில்லியம் கல்லூரியின் தற்போதைய செயலராக உள்ளார்.[1] இக்கல்லூரி நாகர்கோவிலிலிருந்து மேற்கே 5 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.[2] தமிழ்நாடு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு புது தில்லி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று செயல்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads