நாகேஸ்வர ராவ் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகேஸ்வர ராவ் பூங்கா (ஆங்கிலம்: Nageshwara Rao Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.[1][2][3][4]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 52 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள், 13.0366°N 80.2635°E ஆகும்.
பெருநகர சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இயங்கி வரும் 525 பூங்காக்களில் நாகேஸ்வர ராவ் பூங்கா முக்கியமான ஒன்றாகும்.[5]
'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில், ஒயிலாட்டம், காவடியாட்டம் , கரகாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை நடனம்[6] போன்ற நாற்பது கலைகளுடன் கூடிய கலாச்சார பண்பாட்டு விழா,[7] 14-01-2023 முதல் 17-01-2023 வரை[8] நடைபெற்ற சென்னையின் முக்கிய பதினெட்டு இடங்களில்[9] நாகேஸ்வர ராவ் பூங்காவும் ஒன்றாகும்.[10][11][12]
இப்பூங்காவில், நடைப்பயிற்சி மேற்கொள்வோர்க்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல், 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரே நாளில் 83 கலைஞர்களால் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள், எண்ணெய் ஓவியங்கள், மணல் கலைப்படைப்புகள், பொது கண்காட்சி மற்றும் பொறிக்கப்பட்ட படைப்புகள் காண்போரை வியக்கும் வண்ணம் அமைந்தன.[13]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
