புலவர்நத்தம் நிருதீஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் புலவர்நத்தத்தில் உள்ள இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புலவர்நத்தம் நிருதீஸ்வரர் கோயில், குருத்தலமான திருஆலங்குடிக்கு தென்மேற்கே ஒரு கி.மீ தொலைவில், ஆலங்குடி திருத்தலத்திற்கு நிருதி பாகமான புலவர்நத்தம் கிராமத்தில் உள்ள தொன்மையான சிவாலயம். திருஆலங்குடிக் கோயிலைச் சுற்றி ஒவ்வோர் திசைக்கும் ஒவ்வொன்றாய் உள்ள கோயில்களில் நிருதி பாகத்துத் திருத்தலமிது.[1]
Remove ads
வரலாறு
பூளைவன நத்தம் என்ற பெயரில் பெரிய நகராக விளங்கிய ஊர் இவ்வூர். வங்கனார் என்ற சங்கப்புலவர் இத்திருத்தலத்தின் சக்திகளை மக்களுக்கு எடுத்துக் கூறியதை அடுத்து புலவர் நத்தம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
சங்கப்புலவர்கள், மகான்கள்,பாடகச்சேரி சுவாமிகள் முதலானோர் வழிபட்டு வந்த திருத்தலம்.
இத்திருத்தல அம்பிகை தர்மத்தின் வடிவாக விளங்குகின்றார். ஜோதிட ரீதியில் திருமணத்தடை நீக்கும் தலமாகக் கூறப்படுகின்றது. குரோதன பைரவர் சந்நிதியும் உள்ளது.
Remove ads
அருகிலுள்ள திருக்கோயில்
பூதேவி, ஸ்ரீதேவி உடனுறை கரியமாணிக்கப்பெருமாள் (இவர் சனிக்கிரக தோஷத்தைப் போக்குபவராகக் குறிப்பிடப்படுகின்றார்.) [1]
கும்பாபிஷேகம்
புலவர்நத்தத்தில் அமைந்த நிருதீஸ்வரர் மற்றும் கரியமாணிக்கப்பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் 12.05.2013 அன்று நடைபெற்றது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads