மீனாட்சியம்மாள் நடேசய்யர்
எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மீனாட்சியம்மாள் நடேசய்யர் மலையகத் தமிழ் கவிஞர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர்.[1] இவரின் பல கவிதைகள் மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார, வாழ்வியல் சிக்கல்களை எடுத்துரைத்து, அவர்களை தமது உரிமைகளுக்காகப் போராடும்படி தூண்டி அமைந்துள்ளன. இவர் மலையகத்தின், ஈழத்தின் முதல் பெண் கவிஞர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.[2] இவர் மலையக அரசியல்வாதியும், தமிழறிஞரும், பதிப்பாளருமான கோ. நடேசய்யரின் மனைவி ஆவார்.
இலங்கையில் பெண்களின் உரிமைகளுக்காக, குறிப்பாக வாக்குரிமைக்காக இவர் சிறப்பாக செயற்பட்டார்.
Remove ads
படைப்புகள்
- இந்தியத் தொழிலாளர் துயரச்சிந்து – இரண்டு பாகங்கள் - 1931 - சகோதரி அச்சகம், அட்டன்
- இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை - 1940 - கணேஸ் பிரஸ், அட்டன்
எடுத்துக்காட்டுக் கவிதைகள்
- 'பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்- அந்நாள்
- பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்
- தாய்நாடென் றெண்ணி யிருந்தோம்- இவர்கள்
- தகாத செய்கைக் கண்டு மனமிக நொந்தோம்’
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads