மேயர் சுந்தர் ராவ் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேயர் சுந்தர் ராவ் பூங்கா (ஆங்கிலம்: Mayor Sundar Rao Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் எழும்பூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.[1][2][3][4] இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, 1946-47ஆம் ஆண்டுகளில் சென்னையின் முதல் மேயராகப் பணியாற்றிய சுந்தர் ராவ் என்பவரது நினைவாக, இப்பூங்கா பெயரிடப்பட்டுள்ளது.[5][6]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 55 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேயர் சுந்தர் ராவ் பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள், 13.0652°N 80.2606°E ஆகும். இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகம் மற்றும் எத்திராஜ் கல்லூரி ஆகியவை இப்பூங்காவிற்கு அருகிலுள்ள சில முக்கியமான இடங்களாகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads