விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈசுவரன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அழுத கண்ணீர் ஆற்றிய ஈசுவரன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் விராதனூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2] இக்கோயிலின் மூலவர் சன்னதி வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. மகா சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 162 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அழுத கண்ணீர் ஆற்றிய ஈசுவரன் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9.8155°N 78.1765°Eஆகும்.
இக்கோயிலில் மூலவர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈசுவரன் (ரிஷபாருடர்) ஆவார். மூலஸ்தானத்தில் சிவன், பார்வதி, விஷ்ணு ஆகியோர் காட்சியளிக்கின்றனர். பத்ரகாளி, விநாயகர், முருகன், வீரபத்திரர், நந்தி மற்றும் கிராம தேவதைகளான முத்துக்கருப்பண்ணசாமி, இராக்காயி, முனியாண்டி, சப்பாணி, காவல் கருப்பு ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3]
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads