வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கி
தேசிய வேளாண், ஊரக வளர்ச்சிக்கான வங்கி(வட்டார வளர்ச்சி வங்கி) From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development), சுருக்கமாக (நாபார்ட், NABARD) இந்தியாவின் நிதித் தலைநகராகக் கருதப்படும் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வளர்ச்சிக்கான உச்ச வங்கியாகும்.[3] 1982ஆம் ஆண்டு சூலை 12 அன்று நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டம் ஒன்றின் மூலம் இந்தியக் கிராமங்களில் கடன்வழங்கலை உயர்த்தி விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் இந்த வங்கி நிறுவப்பட்டது.[4] நாபார்ட் வங்கிக்கு "இந்தியக் கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பிற பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை, திட்டமிடல் மற்றும் செயலாக்கம் தொடர்பான விடயங்களில்" முழுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
Remove ads
வரலாறு
சிவராமன் குழுவின் பரிந்துரையின்படி சூலை 12, 1982 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சட்டம் 1981" படி நாபார்ட் வங்கி நிறுவப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் வேளாண் கடன் துறை மற்றும் கிராமப்புற திட்டமிடல் மற்றும் கடன் பிரிவு, விவசாய மறுகடன் மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றிற்கு மாற்றாக இவற்றை ஒருங்கிணைத்து நிறுவப்பட்டது.
நபார்டின் பங்கு
கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் கிராமப்புறங்களில் விவசாய மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடன் வழங்குவது தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அதிகாரத்தை வைத்திருக்கும் அமைப்பு நபார்டு ஆகும். கிராம அபிவிருத்திக்கான அபிவிருத்தி திட்டங்களை ஊக்குவிப்பதற்காக முதலீடு மற்றும் உற்பத்தி கடன் ஆகியவற்றை நபார்ட் வழங்குகிறது. அமைப்பின் சீரான செயல்பாட்டிற்காக, நபார்ட் பல மட்டங்களில் ஆட்சேர்ப்பு செய்கிறது. நபார்டு நடத்தும் அதிகாரி ஆட்சேர்ப்பின் முதன்மை நிலை நபார்டு தரம் ஒரு அதிகாரிக்கு.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads