காலிமுகத் திடல்
காலிமுகத் திடல் என்பது இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பில் காலி வீதிக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே காணப்படும் திறந்தவெளி கரையோர முகத்திடல் ஆகும். இது பிரித்தானிய ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்டு என்பவரின் முயற்சியின் பலனாக 1859 ஆம் ஆண்டு உருவானது. இருப்பினும் அசல் காலி முகத்திடலானது இன்று காணப்படுவதை விட மிகப் பெரிய பரப்பளவில் விரிவானதாக இருந்தது. காலிமுகத் திடல் ஆரம்பத்தில் முக்கியமாக குதிரைப் பந்தயத்திற்கும், குழிப்பந்தாட்ட அரங்காகவும் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் துடுப்பாட்டம், கால்பந்து, டென்னிஸ், ரக்பி ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்பட்டது.
Read article
Nearby Places

கொழும்பு
இலங்கையின் வர்த்தகத் தலைநகரம்

கோட்டை (கொழும்பு)
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய வணிக மாவட்டம்

பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு

நாணய நூதனசாலை, கொழும்பு
இலங்கை மின்சார சபை
சனாதிபதி மாளிகை, கொழும்பு

பழைய கொழும்பு கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கம்

எச்செலான் பாசறை
கொழும்பு கோட்டையில் உள்ள இராணுவ பாசறை