அகமுடையார்
முக்குலத்தோரில் ஒரு சாதியினர் / From Wikipedia, the free encyclopedia
அகமுடையார் (Agamudayar) (அகம்படியார் மற்றும் அகமுடையான் எனவும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் தென்னிந்தியாவில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முக்குலத்தோர்களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து முக்குலத்தோர் எனப்படுவர். அகமுடையார் குலத்தில் சேர்வை, தேவர், உடையார், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட பட்டங்களே பெரும்பான்மையாக கொண்டுள்ளனர்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
அகமுடையார் | |
---|---|
1909 ஆம் ஆண்டில், அகமுடையார்கள் | |
வகைப்பாடு | பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
மதங்கள் | இந்து |
மொழிகள் | தமிழ் |
நாடு | இந்தியா |
மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் |
இனம் | தமிழர் |
மக்கள் தொகை | 1981-1982: தமிழ்நாட்டின், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில், மக்கள் தொகையில் 5 சதவீதம்.[1] |
அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் கொண்டுள்ளனர். குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்கள் தேவர் பட்டமே கொண்டுள்ளனர். தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலப்பிரிவை சார்ந்துள்ளனர் மற்றும், ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” போன்றவையும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்கள் கொண்டுள்ளனர்.
அகமுடைய முதலியார் என்பது போர்ப்படை தளபதிகளைக் குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமை தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது உடையார், பிள்ளை என்று இருந்த போதிலும், அவர்கள் தங்களை அகமுடையார்களாகவே அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.