![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/UP_region_map.gif/640px-UP_region_map.gif&w=640&q=50)
அவத்
From Wikipedia, the free encyclopedia
தில்லி சுல்தானகம், முகலாயர் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களால் அவத் அல்லது அயோத்தி (Awadh - Awadhi-Oudh), (இந்தி|अवध) (உருது:|اودھ) ஒலிப்புⓘ), எனப் பலவாறாக அழைக்கப்பட்டதே பாரதத்தின் பண்டைய கோசல நாடாகும் நாடாகும். பொதுவாக சமசுகிருதம் - பாரசீக மொழிகள் கலந்த அவதி மொழி பேசப்பட்ட பகுதிகளை அவத் என்பர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/UP_region_map.gif/640px-UP_region_map.gif)
அவத்
अवध, اودھ | |
---|---|
வரலாற்றுக் காலப் பகுதி | |
![]() இந்தியாவில் அவத் பகுதியின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
கோட்டங்கள் | லக்னோ கோட்டம் பைசாபாத் கோட்டம் தேவிபடான் கோட்டம் கான்பூர் கோட்டம் அலகாபாத் கோட்டம் |
மொழிகள் | அவதி மொழி இந்துஸ்தானி இந்தி பாரசீகம் உருது |
தொகுதி | முன்பு பைசாபாத் தற்போது லக்னோ |
ஏற்றம் | 100 m (300 ft) |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/Lalbagh_gate_faizabad_c.1801.jpg/640px-Lalbagh_gate_faizabad_c.1801.jpg)
அக்பர் ஆட்சிக் காலத்தில் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியை அவத் என அழைக்கப்பட்டது.
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் ஆவணங்கள் அயோத்தியை அவத், அவுத், உத் என குறித்துள்ளது. பிரித்தானியர்கள் தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்பகுதியை இந்திய விடுதலைக்கு முன்பு வரை ஆக்ரா மற்றும் அவுத் ஐக்கிய மாகாணம் எனக் குறித்துள்ளனர்.
முகமது ஷா தலைமையிலான முகலாயப் பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், அவுத் பகுதியின் ஆளுனராக இருந்த சதாத் அலி கான் என்பவர் அயோத்திக்கு அருகில் பைசாபாத் நகரத்தை நிறுவி 1719-ஆம் ஆண்டில் அவத் பகுதியின் நவாப் ஆனார். அவரும் அவரது 12 வாரிசுகளும் அவத் பகுதியை 1719 முதல் 1858 முடிய அவுத் நவாப்புகள் என்ற பெயரில் 139 ஆண்டுகள் ஆண்டனர்.
1857 சிப்பாய் கலவரத்திற்குப் பின்னர் பிரித்தானியாவின் இந்திய அரசின் துணைப்படைத் திட்டத்தை ஏற்ற அயோத்தி சுல்தான்களின் தனியுரிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டு தோறும் கப்பம் செலுத்தும் சுதேச சமஸ்தானம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
1858ல் இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் அறிவித்த அவகாசியிலிக் கொள்கைப்படி, வாரிசு அற்ற அவத் இராச்சியத்தை பிரித்தானிய இந்திய அரசுடன் இணைத்தனர்.