![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/41/Publius_Ovidius_Naso_in_the_Nuremberg_chronicle_XCIIIv.jpg/640px-Publius_Ovidius_Naso_in_the_Nuremberg_chronicle_XCIIIv.jpg&w=640&q=50)
ஆவிட்
From Wikipedia, the free encyclopedia
ஆவிட் (Ovid) என அறியப்படும் பப்ளியஸ் ஆவிடஸ் நாசோ (Publius Ovidius Naso, மார்ச் 20, கிமு 43 – கிபி 17) ஒரு உரோமக் கவிஞர் ஆவார்.[1] இவர் காதல், கைவிடப்பட்ட பெண்கள், தொன்மம் சார்ந்த உருமாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து எழுதியுள்ளார். மரபு வழியாக வேர்ஜில், ஹோராஸ் ஆகியோருடன், இலத்தீன் இலக்கியத்தின் பெரும் புலவர்களுள் ஒருவராக ஆவிட் கருதப்படுகிறார்.[2] பிந்திய பழங்காலத்திலும், மத்திய காலத்திலும், இவரது கவிதைகளைப் போல எழுதும் வழக்கம் பெருமளவில் நிலவியதுடன், இக்கவிதைகள், ஐரோப்பியக் கலையிலும், இலக்கியத்திலும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கக்கூடிய தாக்கத்தை உண்டாக்கியிருந்தன.[3]
விரைவான உண்மைகள் ஆவிட்Ovid, பிறப்பு ...
ஆவிட் Ovid | |
---|---|
![]() "ஆவிட்"டைக் கற்பனையில் வரைந்த படம். நூரம்பர்க் குரோனிக்கிள், 1493ன் இல் இடம்பெற்றது. | |
பிறப்பு | பப்ளியசு ஆவிடசு நாசோ மார்ச் 20, கிமு 43 சுல்மோ, ரோமக் குடியரசு |
இறப்பு | கி.பி.17 டோமிஸ் (தற்போது கான்ஸ்ட்டன்டா), சித்தியா மைனர், கிரேக்கக் குடியேற்றம் |
தொழில் | கவிஞர் |
மூடு