இந்திய மேலாட்சி அரசு
1947 முதல் 1950 வரையிலான வரலாற்று காலத்ததில் இந்தியாவில் நிலவிய அரசு / From Wikipedia, the free encyclopedia
இந்திய மேலாட்சி அரசு (அதிகாரப்பூர்வமாக இந்திய ஒன்றியம் அல்லது இந்திய ஐக்கியம் (இந்தியன் யூனியன், Indian Union, இந்திய டொமினியன், Dominion of India) என்பது ஆகஸ்ட் 15 1947க்கும் ஜனவரி 26 1950க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு மேலாட்சி அரசுகளில் இந்திய ஒன்றியமும் ஒன்றாகும். 1950 இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்பால் குடியரசாக மாற்றப்பட்டது.[1]
இந்திய ஒன்றியம் Union of India | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1947–1950 | |||||||||
நிலை | டொமினியன் | ||||||||
தலைநகரம் | புது டில்லி | ||||||||
பேசப்படும் மொழிகள் | ஆங்கிலம், இந்திய மொழிகள் | ||||||||
அரசாங்கம் | அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி | ||||||||
இந்தியாவின் பேரரசர் | |||||||||
• 1947-50 | ஆறாம் ஜார்ஜ் | ||||||||
தலைமை ஆளுனர் | |||||||||
• 1947-48 | மவுண்ட்பேட்டன் பிரபு | ||||||||
• 1948-50 | ராஜாஜி | ||||||||
பிரதமர் | |||||||||
• 1947-50 | ஜவகர்லால் நேரு | ||||||||
வரலாற்று சகாப்தம் | பனிப்போர் | ||||||||
ஆகஸ்ட் 15 1947 | |||||||||
1947-48 | |||||||||
ஜனவரி 26 1950 | |||||||||
நாணயம் | இந்திய ரூபாய் | ||||||||
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | IN | ||||||||
|
ஐக்கிய இராச்சியத்தின் வேந்தரான ஆறாம் ஜார்ஜ் முழு இந்தியாவுக்கும் மன்னராக இருந்தார். அரசுத் தலைவராக இந்தியாவின் தலைமை ஆளுனரும் (கவர்னர் ஜெனரல்), பிரதமரும் இருந்தனர். கவர்னர் ஜெனரல் வைஸ்ராயாக நியமிக்கப்படவில்லை. பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் வழக்கமாக இருந்தது. வைஸ்ராய் அலுவலகம் சுதந்திரத்திற்கு பின்னர் இரத்து செய்யப்பட்டது. விடுதலைக்கும் இந்தியா குடியரசாக மாற்றப்படுவதற்கும் இடையில் மவுண்ட்பேட்டன் பிரபு (1947-48) மற்றும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1948-50) ஆகிய இரண்டு கவர்னர் ஜெனரல்கள் பதவி வகித்தனர்:. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார்.