![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b0/COLLECTIE_TROPENMUSEUM_Wajangfiguur_van_perkament_voorstellende_Indrajit_TMnr_8-302.jpg/640px-COLLECTIE_TROPENMUSEUM_Wajangfiguur_van_perkament_voorstellende_Indrajit_TMnr_8-302.jpg&w=640&q=50)
இந்திரசித்து
இந்திய புராதான நூலான ராமாயணத்தில் வரும் ராவணன் மற்றும் மண்டோதரியின் மகன் ; மாயப் போர் நுட்பங் / From Wikipedia, the free encyclopedia
இந்திரஜித் அல்லது மேகநாதன் இந்து புராணங்களின்படி இலங்கை நாடு மற்றும் இந்திர லோகத்திற்கு (சொர்க்கம்) இளவரசனாவான். இந்து புராணமானா இராமாயணத்தின்படி இவன் இராவணனின் மகனாவான். இவனது தாயார் மண்டோதரி இந்து புராணங்களில் மிகப் பெரிய போர்வீரர்களில் ஒருவனாக அவர் கருதப்படுகிறான். இவன் மந்திர வலிமைப்படைத்தவன். இவனைப் பற்றி இந்திய காவியமான இராமாயணம் குறிப்பிடுகிறது. மேலும் இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே நடைப்பெற்ற பெரும் போரில் இந்திரஜித் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தான். இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் மற்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி பூமியில் இதுவரை பிறந்த சிறந்த போர்வீரன் என்று அவர் கருதப்படுகிறார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b0/COLLECTIE_TROPENMUSEUM_Wajangfiguur_van_perkament_voorstellende_Indrajit_TMnr_8-302.jpg/640px-COLLECTIE_TROPENMUSEUM_Wajangfiguur_van_perkament_voorstellende_Indrajit_TMnr_8-302.jpg)
மூன்று மூர்த்திகளின் பிரம்மாஸ்திரம், வைணவஸ்திரம், மற்றும் பாசுபத அஸ்திரம் ஆகிய மூன்று ஆயுதங்களை வைத்திருந்த ஒரே ஒரு போர்வீரன் அவர் எனவும் போற்றப்படுகிறான். அவர் தனது குரு சுக்ராச்சாரியார் மற்றும் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் போன்றவர்களிடமிருந்து அனைத்து வகையான ஆயுதங்களையும் பெற்றவர் ஆவான். மேலுலகத்தில் இந்திர லோகத்தில் உள்ள தேவர்களையும், அசுரர்களையும் மற்றும் மும்மூர்த்திகளையும் போரில் தோற்கடித்ததன் மூலம் அவர்களது அனைத்து வகையான ஆயுதங்களையும் தன் வசம் வைத்திருந்தான்.[1]
சீதையை மீட்கும் போரில், இராமர் மற்றும் இலட்சுமணன்ஆகிய இருவரையும் இந்திரஜித் அடக்கினான். பின்னர் இந்திரஜித், இலக்குமணனால் அவர்களின் இரண்டாவது சந்திப்பில் வீழ்த்தப்படுகிறான்.[2] இந்திரஜித் 670 லட்சம் வானரங்களை ஒரே நாளில் கொன்றான். இந்தப் போரில் கிட்டத்தட்ட பாதி குரங்கு இனம் அழிந்தது.[1][3]