iyesu kiristhuvin valkaiyum ooliyamum From Wikipedia, the free encyclopedia
இயேசுவின் பணிவாழ்வு அல்லது இயேசுவின் மறைபணி என்பது யோர்தான் ஆற்றில் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெறுவதில் தொடங்கி அவரின் இறுதி இராவுணவு முடிய உள்ள அவரின் வாழ்க்கைப் பகுதியினைக் குறிக்கும்.[1] லூக்கா நற்செய்தி (3:23) இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது எனக்குறிக்கின்றது.[2][3] வரலாற்றாசிரியர்களின் படி இயேசுவின் பணிவாழ்வு கி.பி 27-29 இல் துவங்கி கி.பி 30-36 இல் முடிவடைந்திருக்கலாம்.[2][3][4]
கலிலேயாவில் தொடக்கப் பணிவாழ்வு இயேசுவின் திருமுழுக்கிற்குப் பிறகு சோதனைக்காக கலிலேயாவுக்குத் திரும்பி வருவதிலும்.[5] கலிலேயாவில் பணியாற்றி தனது முதல் சீடர்களை தேர்வுசெய்வதிலும் அடங்குகின்றது.[1][6] கலிலேயாவில் பணிவாழ்வில் திருத்தூதர்களைத் தேர்வு செய்வதிலும், இயேசுவின் பணிவாழ்வின் பெரும் பகுதியுமாக அமைகின்றது.[7][8] கலிலேயாவில் இறுதி பணிவாழ்வு திருமுழுக்கு யோவானின் இறப்பில் தொடங்கி எருசலேம் செல்ல இயேசு ஆயத்தமாவதற்கு முன் முடிவடைகின்றது.[9][10] யூதேயாவில் இயேசுவின் பணிவாழ்வில் யூதேயாவழியாக எருசலேம் செல்ல இயேசு ஆயத்தமாகின்றார்.[11][12][13][13][14][14] இக்காலத்தில் அவர் தான் முன்னர் திருமுழுக்கு பெற்ற யோர்தார் ஆற்றங்கரைப்பகுதிகளில் பணியாற்றினார்.[15][16][17]
இயேசுவின் பணிவாழ்வின் இறுதி வாரம் எருசலேமில் நிகழ்ந்தது. இது திருப்பாடுகளின் வாரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதலில் தொடங்குகின்றது.[18] எல்லா நற்செய்தி நூல்களும் இயேசுவின் பணிவாழ்வின் பிற கட்டங்களைவிட இதனையே அதிகம் (மூன்றில் ஒரு பங்கு) விவரிக்கின்றன.[19]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.