இரவி சங்கர் பிரசாத்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ரவி சங்கர் பிரசாத் (Ravi Shankar Prasad, ஆகத்து 30, 1954) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். இவர் 2014 நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையிலும் மற்றும் 2019 இரண்டாம் அமைச்சரவையிலும் சட்டம் & நீதித் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகங்களின் அமைச்சராக இருந்தார்.[1][2][3][4][5] மாநிலங்களவை உறுப்பினரான இரவி சங்கர் பிரசாத் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்துள்ளார். இந்திய உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞர்களாக ஏற்கப்பட்டவர்களில் ஒருவர்.
இரவி சங்கர் பிரசாத் | |
---|---|
30 மே 2019 - 7 மே 2021 | தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சர் |
5 ஜூலை 2016 -7 ஜூலை 2021 | மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் |
5 ஜூலை 2016-7 ஜூலை 2021 | சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் |
26 மே 2014-9 நவம்பர் 2014 | சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் |
26 மே 2014-5 ஜூலை 2016 | தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சர் |
29 ஜனவர் 2003-22 மே 2004 | தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் |
1 ஜூலை 2002-29 ஜனவரி 2003 | சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் |
1 செப்டெம்பர் 2001-1 ஜூலை 2002 | நிலக்கரித் துறை சுரங்கத்துறை இணை அமைச்சர் |
இந்திய மக்களவை உறுப்பினர், | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | சத்ருகன் பிரசாத் சின்கா |
தொகுதி | பட்னா சாகிப் |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 3 ஏப்ரல் 2000 – 30 மே 2019 | |
பின்னவர் | இராம் விலாசு பாசுவான் |
தொகுதி | பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 ஆகத்து 1954 (1954-08-30) (அகவை 69) பட்னா, பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மாயா சங்கர் |
முன்னாள் கல்லூரி | பாட்னா பல்கலைக்கழகம் (BA, MA, LLB) |
தொழில் | வழக்கறிஞர் |
2001இல் வாஜ்பாய் தலைமையிலான தேஜகூ அரசில் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர், 2002ல் கூடுதல் பொறுப்பாக நீதித் துறை வழங்கப்பட்டபோது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வந்தார். தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார்.[6] பா. ஜ. க தேசிய தலைமைச் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.