இலங்கை சுதந்திரக் கட்சி
From Wikipedia, the free encyclopedia
இலங்கை சுதந்திரக் கட்சி (Sri Lanka Freedom Party; ශ්රී ලංකා නිදහස් පක්ෂය) இலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். இது 1951 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வந்தது. முதல் முறையாக 1956 இல் ஆட்சியமைத்தது அது முதல் பல முறைகளில் ஆட்சி அமைத்துள்ளது. இ.சு.க புரட்சியற்ற சோசலிச கொள்கையை கைப்பிடித்ததோடு சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது.
இலங்கை சுதந்திரக் கட்சி Sri Lanka Freedom Party | |
---|---|
ශ්රී ලංකා නිදහස් පක්ෂය | |
தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
செயலாளர் நாயகம் | தயசிரி ஜயசேகர[1] |
நிறுவனர் | எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா |
தொடக்கம் | 2 செப்டம்பர் 1951 (72 ஆண்டுகள் முன்னர்) (1951-09-02) |
முன்னர் | சிங்கள மகா சபை |
தலைமையகம் | 307, டி. பி. ஜயா மாவத்தை, கொழும்பு 10 |
செய்தி ஏடு | சிங்களே, தினகரா |
இளைஞர் அமைப்பு | இ.சு.க. இளைஞர் குன்னணி |
கொள்கை | சமூக மக்களாட்சி[2][3][4] சிங்கள பௌத்த தேசியம் |
அரசியல் நிலைப்பாடு | நடுநிலை-இடதுசாரி |
தேசியக் கூட்டணி | மகாஜன எக்சத் பெரமுன (1956 - 1959) மக்கள் கூட்டணி (1994 – 2004) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (2004 – 2019) சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு (2019 - இன்று) |
நிறங்கள் | நீலம் |
நாடாளுமன்றம் | 15 / 225 |
மாகாணசபைகள் | 269 / 417 |
உள்ளாட்சி சபைகள் | 9 / 340 |
தேர்தல் சின்னம் | |
கை | |
இணையதளம் | |
www | |
இலங்கை அரசியல் |
ஏப்ரல் 2 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6% வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் இலங்கை சனாதிபதி தேர்தல், 2005 இல் இ.சு.க. வேட்பாளர் மகிந்த ராஜபக்ச 50.3% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.