இழ்சாக் கார்ட்டியே
From Wikipedia, the free encyclopedia
இழ்சாக் கார்ட்டியே (யாக்குவசு கார்ட்டியர் Jacques Cartier, டிசம்பர் 31, 1491–செப்டம்பர் 1, 1557) ஒரு புகழ்பெற்ற பிரான்சிய புதுப்புலம் ஏகுநர் (explorer) ஆவார். இவர் இன்றைய கனடா நாட்டினை முதன் முதலாக ஐரோப்பியர்களுக்கு அறிவித்து பிரான்சின் உடைமையாக உரிமை வேண்டினார். கனடாவில் உள்ள செயின்ட் லாரன்சு வளைகுடாவையும், செயின்ட் லாரன்சு ஆற்றையும் முதன் முறையாக விளக்கி அதன் நில வரைபடங்களை உருவாக்கினார்.[5] லாரன்சு ஆற்றுக் கரைப்பகுதியிலும், ஓக்கெலாக (Hochelaga) (மான்ட்ரியால் தீவு) ஊர்ப் பகுதியிலும், சிட்டாடகோனா (Stadaconna) (கியுபெக் நகரம்) ஊர்ப்பகுதியிலும் வாழ்ந்த செயின்ட் லாரன்சு இரோக்குவா மக்களையும், அந்நிலப்பகுதியையும் "கனடா நாடு" என்று அறிவித்தார்[1][2][3][4].
விரைவான உண்மைகள் இழ்சாக் கார்ட்டியே Jacques Cartier, பிறப்பு ...
இழ்சாக் கார்ட்டியே Jacques Cartier | |
---|---|
ஏறத்தாழ 1844 இல், தெயோஃவில் ஆமல் (Théophile Hamel) வரைந்த இழ்சாக்கசு கார்ட்டியேவின் படம் | |
பிறப்பு | டிசம்பர் 31, 1491 செயின்ட்-மாலோ, பிரான்சு |
இறப்பு | செப்டம்பர் 1, 1557 செயின்ட்-மாலோ, பிரான்சு |
பணி | பிரான்சிய கலவர் (navigator), புதுப்புலம் ஏகுநர் (explorer) |
அறியப்படுவது | முதன் முறையாக கனடாவைப் பற்றி ஆவணப்படுத்தி, கனடாவை பிரான்சின் நாடாக உரிமை கொண்டாடினார் |
மூடு