ஈகைத் திருநாள்
இசுலாமிய சமய பண்டிகைகளில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் (அரபு மொழி: عيد الفطر ஈதுல் ஃபித்ர்) என்பது இசுலாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். இசுலாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது.[1] ரமலான் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது. ஈத் என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பது பொருளாகும்.