உத்தாலக ஆருணி
வேத கால முனிவர் / From Wikipedia, the free encyclopedia
ஆருணி (Aruni) (கிமு எட்டாம் நூற்றாண்டு), இந்து தொன்மவியலில் பிற்கால வேதகாலத்தில் வாழ்ந்த ரிஷியான இவரை உத்தாலகர் அல்லது உத்தாலக ஆருணி என்றும் அழைப்பர்.[1][2]
உத்தாலக ஆருணியின் மகன் சுவேதகேது அவரது சீடருமாகவும் அறியப்படுகிறார்.
வேத கால சமஸ்கிருத உபநிடதங்களில், குறிப்பாக பிரகதாரண்யக உபநிடதம் மற்றும் சாந்தோக்கிய உபநிடதங்களில் மகரிஷி ஆருணி பிரம்ம வித்தையை கற்பிக்கும் குருவாக குறிபிடப்படுகிறார்.[3]
இப்புகழ் பெற்ற வேதகால குரு ஆருணி, கௌதம புத்தருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.[1] ஆருணியின் புகழ் பெற்ற சில சீடர்களில் யாக்யவல்க்கியர் மற்றும் சுவேதகேது ஆவர்.[3] ஆருணியும், யாக்யவல்க்கியரும் இந்து சமய உபநிடத ஆசிரியர்களாக பெரும்பான்மையாக அறியப்படுகிறார்கள்.[4]
டெல் அவீவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பென் – அமி ஸ்கார்ப்ஸ்டின், பதிவு செய்யப்பட்ட தத்துவ வரலாற்றில், உத்தாலக ஆருணியும் பண்டைய தத்துவ ஆசிரியர்களில் ஒருவராக அறியப்படுகிறார் எனக் குறிப்பிடுகிறார்.[1] உத்தாலக ஆருணி தன் மகனும், சீடனுமான சுவேதகேதுவிடம், எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாக கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பி, பிரம்மம் மற்றும் ஆத்மா தத்துவங்களை உபதேசம் செய்து அத்வைத தத்துவத்தை நிலைநாட்டுகிறார்.[5]