உபவேதங்கள்
From Wikipedia, the free encyclopedia
உபவேதங்கள் பல்வேறு துறை சார்ந்த தொழில்நுட்பத் தகவல்கள் உபவேதங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.[1][2] [3] தலைமுறை தலைமுறையாக வேதகால முனிவர்கள் காலம் முதல் கைமாற்றி அளிக்கப்படும் பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள தகவல்களே நான்கு உபவேதங்களாக அறியப்படுகின்றன.
ரிக், யசுர், சாம, அதர்வணம் ஆகிய நூல்கள் நான்கும் முக்கியமான வேத நூல்கள் எனப்படுகின்றன. அவற்றிற்குத் துணையாக தோன்றிய நால்வகை நூல்கள் உபவேதம் எனப்படுகின்றன. அவை, மருத்துவ நூலாகிய ஆயுர்வேதம், அனைத்து படைகலன்களையும் பற்றியும் அவற்றை பயிலும் முறையைப் பற்றியும் கூறும் தனுர்வேதம், இசையின் மூலம் கடவுளர்களை வழிபடும் முறையை தெரிவிக்கும் காந்தர்வ வேதம், செல்வத்தை ஈட்டுதல், காத்தல், வகைப்படுத்திச் செலவு செய்தல், பயன் துய்த்தல் போன்றவற்றை உணர்த்தும் நூல் அர்த்தசாஸ்திரம் மற்றும் சில்ப வேதம் என்பனவாகும்.
வேதாங்கங்களின் பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகிறது.