உலக உணவுத் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
உலக உணவுத் திட்டம் (World Food Programme; WFP) என்பது ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு பிரிவு ஆகும். இது பட்டினியைப் போக்கவும், உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கவும் பாடுபடும் உலக அளவில் மிகப்பெரும் மனிதநேய அமைப்பாகும்.[1] இவ்வமைப்பின் கூற்றுப்படி, இது ஒவ்வொரு ஆண்டும் 83 நாடுகளில் சராசரியாக 91.4 மில்லியன் மக்களுக்கு உணவு உதவியை வழங்குகிறது.[2] தமக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் போதுமான உணவை உற்பத்தி செய்யவோ அல்லது பெறவோ முடியாத மக்களுக்கு உதவ இவ்வமைப்பு உரோமில் உள்ள இதன் தலைமையகத்திலிருந்தும், உலகெங்கிலும் உள்ள 80 க்கும் மேற்பட்ட நாடுகளின் அலுவலகங்களிலிருந்தும் செயல்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் மற்றும் அதன் செயற்குழுவின் ஒரு பகுதியாகும்.[3]
உலக உணவுத் திட்டத்தின் சின்னமும், உரோமில் அதன் தலைமையகமும் | |
சுருக்கப்பெயர் | WFP |
---|---|
உருவாக்கம் | 19 திசம்பர் 1961; 62 ஆண்டுகள் முன்னர் (1961-12-19) |
வகை | அரசுகளுக்கிடையேயான அமைப்பு, ஒழுங்குமுறை அமைப்பு, ஆலோசனைக் குழு |
சட்டப்படி நிலை | செயலில் |
தலைமையகம் | உரோம், இத்தாலி |
தலைவர் | டேவிட் பீசுலி |
மேல் அமைப்பு | ஐக்கிய நாடுகள் பொதுச் சபை |
விருது(கள்) | அமைதிக்கான நோபல் பரிசு 2020 |
இணையதளம் | wfp.org |
பட்டினியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காகவும், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக்கான நிலைமைகளை மேம்படுத்துவதில் அதன் பங்களிப்புகளுக்காகவும், போர் மற்றும் ஆயுத மோதல்களில் பட்டினியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு உந்து சக்தியாக செயல்பட்டதற்காகவும் இந்த அமைப்புக்கு 2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[4][5]