எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்
எகிப்தின் பழங்கால வரலாற்றுக் காலம் / From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் (Second Intermediate Period of Egypt) (கிமு 1650 - கிமு 1580) இரண்டாம் இடைநிலைக் காலம் என்பது பண்டைய எகிப்தை வெளிநாட்டு குறிப்பாக பண்டைய அண்மை கிழக்கின் ஐக்சோஸ் மக்கள் கிமு 1650 முதல் கிமு 1550 முடிய நூறு ஆண்டுகள் ஆட்சி செய்த காலமாகும். இது பண்டைய எகிப்தின் வரலாற்றில் எகிப்தின் மத்திய கால இராச்சியத்தின் இறுதிக் காலத்திற்கும், புது எகிப்திய இராச்சியத்தின் துவக்க காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பண்டைய எகிப்து இரண்டாம் முறையாக வெளிநாட்டு மக்களால் சீர்குலைந்த காலப்பகுதியைக் குறிக்கிறது.[1][2]
எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 1650–கிமு 1580 | |||||||||
தலைநகரம் | ஆவரிஸ் (கிமு 1674 – கிமு 1535, எகிப்தின் பதினைந்தாம் வம்சம்)
| ||||||||
பேசப்படும் மொழிகள் | பண்டைய எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
பார்வோன் | |||||||||
• கிமு 1648 | சாலிடிஸ் (முதல்) | ||||||||
• கிமு 1555 – கிமு 1550 | காமோஸ் (இறுதி) | ||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 1650 | ||||||||
• முடிவு | கிமு 1580 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | எகிப்து |
எகிப்தின் இந்த இரண்டாம் இடைநிலைக் காலத்தில் பண்டைய அண்மைக் கிழக்கில் வாழ்ந்த பிலிஸ்தியர்கள் எனும் ஐக்சோஸ்[3] இன மக்களின் தலைவர் சாலிடிஸ் என்பவர் மேல் எகிப்தின் தீபை நகரத்தைக் கைப்பற்றி, எகிப்தின் பதினைந்தாம் வம்சத்தை நிறுவினார்.
எகிப்தின் இடைநிலைக்காலத்தின் போது எகிப்தின் பதினைந்தாம் வம்சம், எகிப்தின் பதினாறாம் வம்சம் மற்றும் பதினேழாம் வம்ச மன்னர்கள் எகிப்தை ஆட்சி செய்தனர்.