எதிரொளிப்பு
From Wikipedia, the free encyclopedia
எதிரொளிப்பு அல்லது ஒளித்தெறிப்பு அல்லது ஒளித்திருப்பம் (Reflection) என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்.
நாம் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நம் முகம் நமக்கு எவ்வாறு தெரிகின்றது? இருட்டான ஓர் அறையிலே கண்ணாடியில் நம் முகம் தெரியுமா? ஏன் தெரியவில்லை? வெளிச்சமான ஓரிடத்தில் நாம் கண்ணாடி முன்னர் நின்றால், நம் முகத்தில் ஒளிக்கதிர்கள் பட்டு எதிருவுற்று பின்னர் அவ்வொளி அலைகள் சென்று கண்ணாடியில் பட்டு கண்ணாடியால் எதிர்வுற்று நம் கண்களில் வந்து சேர்வதால் நாமே நம் முகத்தைப் பார்க்க இயலுகின்றது. இப்படி கண்ணாடியிலும், பிற பொருள்களிலும் ஒளி பட்டு எதிர்வது (தெறிப்பது) ஒளியெதிர்வாகும்.[1][2][3]
ஒலியியலில், இதனை எதிரொலிப்பு என்பார்கள். எதிரொலிப்பு உருவாக்கும் ஒலிக்கு எதிரொலி (echo) என்று பெயர். இதனை ஒலி மாற்றுணரியில் பயன்படுத்துகின்றனர். நிலவியலில் , நிலநடுக்க அலைகளைப் பற்றிய பாடங்களில் இது முக்கியமானவை . நீர்நிலைகளில் உள்ள மேற்பரப்பு அலைகளில் எதிரொலிப்பு (எதிரொளிப்பு) கண்டறியப்படுகிறது . காண்புறு ஒளிக்கிடையில் , பல வகையான மின்காந்த அலைகள் காணப்படுகின்றன . உயர் அதிர்வெண்ணும் , அதி உயர் அதிர்வெண்களின் எதிரொளிப்புகள் வானொலி சேவையிலும் , ரேடாரிலும் முக்கியமானவையாகும் . ஏன் காமா கதிர்களும் , ஊடுகதிர் அலைகளும் சில கோணங்களில் தனிரக கண்ணாடிகளில் எதிரொளிக்கப்படுகிறது.