ஐக்கிய அமெரிக்கப் பேரவை
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய அமெரிக்கப் பேரவை (United States Congress) என்பது ஐக்கிய அமெரிக்கக் கூட்டரசின் சட்டமன்றமாகும். இது மேலவை (செனட்) மற்றும் கீழவை என்னும் இரு பிரிவுகளைக் கொண்டது.
ஐக்கிய அமெரிக்கப் பேரவை | |
---|---|
117ஆவது ஐக்கிய அமெரிக்கப் பேரவை | |
வகை | |
வகை | |
அவைகள் | செனட் சார்பாளர்கள் அவை |
வரலாறு | |
தோற்றுவிப்பு | மார்ச்சு 4, 1789 (235 ஆண்டுகள் முன்னர்) (1789-03-04) |
முன்பு | கூட்டமைப்பின் பேரவை |
புதிய கூட்டத்தொடர் தொடக்கம் | சனவரி 3, 2021 |
தலைமை | |
செனட் தலைவர் | |
சார்பாளர்கள் அவைத் தலைவர் | |
செனட் இடைக்காலத் தலைவர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 535 வாக்களிக்கும் உறுப்பினர்கள்
|
செனட் அவை அரசியல் குழுக்கள் | பெரும்பான்மை (50)
சிறுபான்மை (50)
|
சார்பாளர்கள் அவை அரசியல் குழுக்கள் | பெரும்பான்மை (220)
சிறுபான்மை (212)
வெற்றிடம் (3)
|
தேர்தல்கள் | |
அண்மைய செனட் அவை தேர்தல் | நவம்பர் 3, 2020 |
Last சார்பாளர்கள் அவை election | நவம்பர் 3, 2020 |
அடுத்த செனட் அவை தேர்தல் | நவம்பர் 8, 2022 |
அடுத்த சார்பாளர்கள் அவை தேர்தல் | நவம்பர் 8, 2022 |
கூடும் இடம் | |
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம் வாசிங்டன், டி. சி. அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு |
மக்களின் சார்பாளர்களைக் கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத ஆறு பேராளர்கள் அமெரிக்க சமோவா, கொலம்பியா மாவட்டம், குவாம், அமெரிக்க கன்னித் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, வட மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.