ஐயனார்
From Wikipedia, the free encyclopedia
ஐயனார் (Aiyaṉār) என்பவர் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் போற்றப்படும் ஒரு திராவிட நாட்டுப்புற மத தெய்வமாகும். ஐயனார் வழிபாடு கிராமப்புறத் தமிழ் மக்களிடையே பரவலாக உள்ளது.[1][2][3] பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைக் குலதெய்வ வழிபாடு என்றும் சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊர்களிலும் காவல் தெய்வம் ஆக இவரை வழிபடுகின்றனர்.[4] கடந்த காலங்களில் தென்கிழக்காசிய நாடுகளிலும் ஐயனாரை வழிபட்டிருக்கலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[5] கிராமப்புறங்களில் உள்ள அய்யனாரின் கோயில்கள் பொதுவாக இவர் மற்றும் இவரது தோழர்கள் குதிரைகள் அல்லது யானைகளில் சவாரி செய்யும் பிரமாண்டமான மற்றும் வண்ணமயமான சிலைகளால் சூழப்பட்டிருக்கும்.[6][7]