ஒடிசா அரசு
இது இந்திய நாட்டில் உள்ள ஓர் மாநில அரசு ஆகும் / From Wikipedia, the free encyclopedia
ஒடிசா அரசு என்பது ஒடிசா மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது அமைச்சரவை, நீதித்துறை, சட்ட ஆக்கத் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் தலைவராக ஆளுநர் இருப்பார். இவர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுவார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, தங்களுக்குள் ஒருவரை மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுப்பர். அவருக்கு கூடுதல் அதிகாரம் இருக்கும். ஒடிசா அரசின் தலைமையகமும், சட்டமன்றமும் புவனேசுவரில் உள்ளன. ஒரிசா உயர் நீதிமன்றம் கட்டாக்கில் உள்ளது.[1]
விரைவான உண்மைகள் தலைமையிடம், ஆளுநர் ...
தலைமையிடம் | புவனேசுவரம் |
---|---|
ஆளுநர் | கணேசி லால் |
முதலமைச்சர் | நவீன் பட்நாய்க், (பிஜத) |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | பிகராம் கேசரி அருகா, (பிஜத) |
உறுப்பினர்கள் | 147 |
உயர் நீதிமன்றம் | ஒரிசா உயர் நீதிமன்றம், கட்டாக் |
தலைமை நீதிபதி | எஸ். முரளிதர் |
மூடு
ஒடிசா சட்டமன்றத்துக்காக மாநிலத்தை 147 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அந்த தொகுதியை முன்னிறுத்துவார். இவர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். இவருக்கு ஐந்தாண்டுக் காலம் பதவில் இருக்கும்.[2]