ஓங்கில்
நீர்வாழ் பாலூட்டி / From Wikipedia, the free encyclopedia
ஓங்கில் அல்லது டால்பின் (ஆங்கிலம்: Dolphin) என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி சிற்றினம் ஆகும். இது திமிங்கலம் மற்றும் கடற்பன்றி ஆகியற்றுடன் நெருங்கிய உறவுமுறை கொண்டது. சுமார் நாற்பது வகையான ஓங்கில் சிற்றினங்கள் பதினேழு வகையான பேரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல் இழை வடிவமுடையது. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. இதன் நுனி கூர்மையாய், விளிம்பில், சுழியுடையதாய் இருக்கின்றது[1]. ஓங்கில்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் வரை உடல் நீளமும் 40 கிலோகிராம் முதல் 10 டன் வரை எடையும் கொண்டவை. டால்பின்கள் ஊனுண்ணிகள். மீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன[2]. உலகம் முழுவதும் இவை காணப்படுகின்றன. சிறப்பாக கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம். ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும்.[சான்று தேவை] இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன.
ஓங்கில் | |
---|---|
Tursiops truncatus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
உள்வரிசை: | |
வரிசை: | பற்திமிங்கிலம் |
துணைக்குழுக்கள் | |