கங்கா நகரம்
From Wikipedia, the free encyclopedia
கங்கா நகரம் (மலாய்: Gangga Negara; ஆங்கிலம்: Gangga Nagara; சீனம்: 刚迦王国) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்து இருந்த ஒரு புராதன அரசு. தோராயமாக கி.பி.100-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1000 ஆண்டுகள் வரையில் பேராக் மாநிலத்தின் புருவாஸ் மாவட்டத்தில் கோலோச்சிய அரசு.[1]
கங்கா நகரம் Beruas Kingdom | |||||||
---|---|---|---|---|---|---|---|
2-ஆம் நூற்றாண்டு–கி.பி.1025 | |||||||
தலைநகரம் | புருவாஸ் | ||||||
பேசப்படும் மொழிகள் | மலாய் மொழி | ||||||
சமயம் | இந்து | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
ராஜா | |||||||
வரலாறு | |||||||
• முடிசூட்டு விழா | கி.பி. 200 2-ஆம் நூற்றாண்டு | ||||||
கி.பி.1025 | |||||||
| |||||||
தற்போதைய பகுதிகள் | மலேசியா |
இந்தப் பேரரசின் ஆளுமை, பேராக் மாநிலத்தில் உள்ள டிண்டிங்ஸ், மஞ்சோங் பகுதிகளிலும் விரிவு அடைந்து இருக்கிறது. இந்த இடங்களில் கங்கா நகரத்தின் பழமையான கலைப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. சில பொருட்கள் ஈப்போ நகரத்திற்கு அருகிலும், மேலும் சில கலைப் பொருட்கள் பீடோர் பகுதிகளிலும் கிடைத்து இருக்கின்றன.[2]
கி.பி.1000-ஆம் ஆண்டுகள் வரை, கங்கா நகர அரசர்கள் பீடோர், தெலுக் இந்தான் பகுதிகளையும் ஆட்சி செய்து இருக்கின்றனர். கங்கா நகரப் பேரரசின் தலைநகரம் பேராக், புருவாஸ் சமவெளியில் இருந்தது. கி.பி. 1025 – 1026-ஆம் ஆண்டுகளில் அந்தப் பேரரசு அழிந்து போனது.
தமிழ்நாட்டில் இருந்து படையெடுத்து வந்த இராசேந்திர சோழன் தொடுத்தத் தாக்குதல்களினால், கங்கா நகரம் அழிந்து போனது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[3]
கங்கா நகரத்திற்குச் சான்று சொல்லும் புதைப் பொருட்களும் கிடைத்து இருக்கின்றன. அவற்றில் சில பொருட்கள், புருவாஸ் அரும் காட்சியகத்தில் உள்ளன. இன்னும் சில பொருட்கள், மலேசியாவின் பிரதானக் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.[4]