விநாயகமூர்த்தி முரளிதரன்
From Wikipedia, the free encyclopedia
விநாயகமூர்த்தி முரளிதரன் (பிறப்பு 1966, பிரபலமாக கேணல் கருணா அம்மான் என்றும் அறியப்படுகிறார்) முன்னாள் போராளியும், இலங்கையின் அரசியல்வாதியுமாவார். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய முரளிதரன், மார்ச் 2004 இல் அவ்வமைப்பிலிருந்து பிரிந்து, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் புதிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டார். இலங்கை அரசின் ஆதரவாளராக செயல்படத் தொடங்கினார்.
விநாயகமூர்த்தி முரளிதரன் | |
---|---|
இலங்கை பாரளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் அக்டோபர் 7, 2008 | |
முன்னையவர் | வசந்த சமரசிங்க |
பின்னவர் | பதவியிலுள்ளார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1966 கிரான், மட்டக்களப்பு மாவட்டம் |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இசுக, முன்னர் தமவிபு |
துணைவர் | Nira |
பிள்ளைகள் | மூன்று பிள்ளைகள் |
ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டபின்னர் அரசியலில் நுழைந்த முரளிதரன் 2008 அக்டோபர் 7 ஆம் நாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்[1]. அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.[2] மார்ச் 9 2009 ஆம் நாள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டார்.
இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் (2008 அக்டோபர் 7) முதல் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.